Pages

Wednesday, October 23, 2013

அந்த நாள் ஞாபகம்

அந்த நாள் ஞாபகம்


அன்னியர் படை எடுத்தது போல்

அம்மணி படம் எடுத்தாடினாள் 


இது சரியல்லவென்று ஏளனம்

அது தவறென்ற மெய்ஞ்ஞானம்


வந்து வாய்த்தவன்  வெந்து போனவன்

வாழ்க்கையை வீணேயாக்கியவன்


என்ற கோபத்தில் எரிந்த  சோகத்தில்

கரிந்த ஆன்மாவைக் கழுவலாயினர்


கொண்டவன் மேல் கொண்ட கோபம்

கொஞ்சம்   கொஞ்சமாய்க் கொண்டதுயிரை


வனிதை விண்ணிற்கும் மண்ணிற்கும்

எரிந்து விழுந்து மக்களைக் கடிந்து


கட்டிலில் விழுந்து கனவோடு போனாள்

ஒன்றல்ல இரண்டல்ல பத்தாண்டு கழித்து.



No comments:

Post a Comment