Pages

Thursday, November 21, 2013

தீமிதி பெண்ணே


அங்கங்கே தென்படும் முகங்கள்

அத்துமீறி நடமாடும் உடல்கள்

தீவந்து உன்மேல்  விழுந்ததோ?

தியை நீ  உன்மேல் விட்டாயோ?


தீவினைகள் உன்மேல்  பட்டதுவோ?

தீயசொல் உன்மேல் படர்ந்ததுவோ?

கோபத்தின் உச்சிமேல் எண்ணைகண்டு

மண்ணை நாட முயற்சித்தாயோ?


அகர இகரம் உகாரம் போல் குழைந்தாங்கு

தோன்றியது  முகம் போன்ற முகம் ஒன்று

சிரிப்பதுவும் அழுவதுவும் ஒன்றே என்ற

சிரிக்காத தத்துவத்தின் முகமானது.


தோலின் மேல் தொலேறி  தொங்கியது

வீங்கிய முகமும் கையும் காட்சியானது

கண்காட்சி அல்ல அது கதறும் காட்சி

உணர்வுகளின்  சுமை தாங்காமல் வீறிய காட்சி


வார்த்தைத்  தீயைத் தப்பிக்க தீயை நாடி

வாடிக்கருகும் மலர்கள் எத்தனையோ?

நாவினால் கக்கப்படும் தீயை  விட

காவு வாங்கும் தீயே மேல் என்பர் அவர்.


எண்ணங்களும் வார்த்தைகளும் சமூகம்தான்

எண்ணி எண்ணிக் கருகிட வே ண்டாம்  தாயே

தனி மனிதன் தனியாய் எண்ணும் அளவிற்கு

தானாக யோசித்து வெல்லும் அளவிற்கு


வளரவில்லை தாயே உணர வேண்டும் நீயே

சமூகம் தான் இன்று தனி மனிதன்

சமூகத்தின் எண்ண அலைகள் தான் வீட்டில்

சமூகம் என்பது எண்ணக் குவியல்கள்


இன்னும் நாம் விலங்கினம் தான்

இதை நாம் மாற்றிடல் ஆகாது காண்

துரத்தி வரும் நெருப்பு எண்ணங்கள்

இன்னும் விலங்கான சமூகத்தின் வலைகள்


தாயாய், போதையாய்ப் பெண்ணைப் படைத்த

மனித மனம் பெண்ணை உயிராய்க் காண

இன்னும் பல நாள் ஆகும் தாயே

இன்னுடலை அக்கினிக்கு இரையாக்காதே நீயே


உன்னை நோக்கி வரும் தீயைப் பிடித்து

முடிந்தால் அன்றைய உணவை ஆக்குவாயே!

Saturday, November 16, 2013

சச்சின் டெண்டுல்கர் November 16, 2013


"உன் கனவுகளை நிஜமாக்கு

அதற்காக குறுக்கு வழியை நாடாதே"


பதினோரு வயது பச்சைக் குழந்தைக்கு

பக்குவப்பட்ட தந்தையின் அறிவுரை


இருபத்து நான்கு வருடங்கள் ஆடி

நேர்மையின், அடக்கத்தின் வழி நாடி


இப்படியும் வாழலாம் இலக்கணம் படைத்து

எளிமையாக, இயற்கையாக மண்ணை ஒற்றி


காவியமாகி, கண்ணீர்  மல்க சென்றதை

கடைசி வரையில் மனம் கரைப்பதில்லை.


இப்படிப்பட்ட யதார்த்தங்களும் இருக்கின்றன

கோடிக்கணக்கான இள இதயங்களுக்கு


இந்த இலக்கணம் இனி அமுதளிக்கும்

நாமும் வாழலாம் எனச் சிந்தனை பிறக்கும்


ஒவ்வொரு உயிராய் நினைவு கூர்ந்து

உயிருக் குயிராய் வாழ்ந்தவர் போற்றி


நின்று அனைவருக்கும் நன்றி சான்ற பாங்கு

நல்லவர் நிச்சயம் வெல்லலாம் என்றது.


உழைக்கும் உழைப்பே தெய்வப்பாங்கு

உழைக்கும் வாய்ப்பை பெறுவது எளிது


உண்ணும் போதும் உறங்கும் போதும்

உழைப்பைச் சார்ந்தே எண்ணி வாழ்ந்தால்


சுத்தமான இருதயக் காற்றில்  சுற்றி நின்ற

அசுத்தக் காற்று தானே அழிந்து பூக்கும்


கோபத்தை வென்ற இந்த நாயகன்

கோடானுகோடி  காலம் வாழ்வான்


இந்திய மண்ணில் இப்படி வாழ்வதே

எனக்கும் உனக்கும் நல்லது உணர்த்தினான்


எத்தர் தான்  ஜெயிக்க இயலும் எனும்

சட்டத்தை இவன் மாற்றி அமைத்தான்


இப்படித்தான் சமூகம் தன்  குணத்தை

படிப்படியாக மாற்றி அமைக்கும்


ஒவ்வொரு நல்லவன் வெற்றியிலும்

ஒரு கோடி விதிகள் மாற்றப்படும்


இனியிவன் நன்றாக வாழ  வேண்டும்

இன்னும் வேறு சேவை புரிய வேண்டும்


நிபுணன் சேவை  நாட்டுக்குத் தேவை

நிச்சயமாகத் தொண்டுகள்  வேண்டும்


அமைதிப்படைகள் நாட்டுக்குத் தேவை

அவை தான் மெல்ல சரித்திரம் எழுதும்


மாமனிதனுக்கு வீடு மட்டும் ஆகுமோ?

உயர்ந்த சிந்தனைவாதி   சமூகத்திற்கே


வாழிய சச்சின் டெண்டுல்கரே!

வாழிய பல்லாண்டு பல்லாண்டு!






Wednesday, November 6, 2013

Thank you Earth


The air was just right

The water was enough

The soil was just fine

To make shadows alive

To feed them all well

Taking steps slowly

Talking species

Tame-able ones came


The story goes on

Time to thank

Time to bless

Time to go on

Tuesday, November 5, 2013

Small pleated girl

Not exactly, actually

She was not pleated small

Her sari was pleated so

She walked on and on

Her hands and mind

Folded in two

Worshipping the sari

She knew her pleats

They did the job

Her shape was seen

Demanding minds

To see see her



She did not see

The lovely trees

She did not feel

The gentle breeze

She did not hear

The songs of birds

She did not think

Of anything else


Her body was her trap

Caught in the prison

She could not look out